2014/03/09GTM
பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்களினால் வெற்றி பெற்று இலங்கை அணி ஐந்தாவது தடவையாக ஆசியக்கிண்ண சம்பியன் ஆகியது.
இலங்கை, பாகி
ஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் பவாட் அலாம் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இது அவரின் முதற்சதம் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ்பா உல் ஹக் 65 ஓட்டங்களையும், உமர் அக்மல் 59 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் 5 விக்கெட்களையும் லசித் மாலிங்க கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் லஹிறு திரிமான்னே 101 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். மஹேல ஜெயவர்தன 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இருவரும் இணைந்து 156 ஓட்டங்களை மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். குஷால் பெரேரா 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் சைட் அஜ்மல் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
போட்டியின் நாயகனாக லசித் மாலிங்க தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, தொடர் நாயகனாக லஹிறு திரிமான்னே தெரிவு செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்களினால் வெற்றி பெற்று இலங்கை அணி ஐந்தாவது தடவையாக ஆசியக்கிண்ண சம்பியன் ஆகியது.
இலங்கை, பாகி
இருவரும் இணைந்து 156 ஓட்டங்களை மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். குஷால் பெரேரா 42 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் சைட் அஜ்மல் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.




Time in Colombo
0 comments:
Post a Comment