s26.2013.12.10.செவ்வாய் கிரகத்தை குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவால் அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி ரோவர் விண்கலம், செவ்வாயில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு சுமார் 31 மைல்கள் நீளமும், 3 மைல் அகலமும் உடைய ஏரி ஒன்று இருந்ததற்கான ஆதாரத்தை கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அங்கு 2012 ஆம் ஆண்டு தரையிறங்கியது.செவ்வாயின் கேல் கிராடருக்குள் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆதாரங்களை கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் பாறைகளில் துளையிட்டு வெளியான துகள் மாதிரிகள் ஆய்வு மேற்கொண்ட போது, நுண்ணுயிரிகள் வாழ்வாதாரத்துக்கு தேவையான கனிமங்கள் இருந்ததாகவும், நீர் தன்மை இருந்ததாகவும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





Time in Colombo
0 comments:
Post a Comment